நாடாளுமன்றத்துக்கு முன்னால் போராட்டம் மேற்கொள்ளும் இளைஞர்கள் சிலர் பொலிஸாரால் கடத்திச்செல்லப்படுவதாக நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இந்த தகவலை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
அமைதியான போராட்டங்களை நடத்தும் இளைஞர்களை மோதலுக்கு இட்டுச் செல்வதை தடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.