இலட்ச மக்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க தயார்!

0
719

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்குதற்கு அமைச்சரவையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் மூலம் குறைந்த வருமானங்கொண்ட 33 இலட்ச மக்கள் நன்மையடையவுள்ளனர்.