தமிழக முதல்வரின் இலங்கை வருகையை எதிர்பார்க்கும் மனோ கணேசன்

0
580

தமிழக முதல்வர் இலங்கைக்கு வழங்கவுள்ள நிவாரண உதவிகள், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவுக்கு வழிவகுக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய மனோ கணேசன், தமிழக முதல்வரின் நிவாரணத்தை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய வம்சாவளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 200 வது வருட நிறைவை முன்னிட்டு தமது கட்சி ஒழுங்கு செய்துள்ள நிகழ்வுக்கு தமிழக முதல்வரை அழைப்பதற்கு தாம் தயாராகி வருவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.