கடந்தகால தவறுகளை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் அலி சாப்ரி!

0
636

இலங்கையில் தற்போதுள்ள எரிவாயு மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினையை உரிய வகையில் முகாமைப்படுத்த முடியாதுபோனால் அவை முழுமையாக இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று நிதியமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் உரையாற்றிய அவர், இந்த நிலைமையை வெற்றிக்கொள்ள கட்சி பேதமின்றி அனைவருக்கும் பொறுப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டில் இலங்கையின் வருமானம் 1500 பில்லியன் ரூபாவாக இருந்தது.

எனினும் 3522 பில்லியன் ரூபா, இதில் மீண்டும் வருமானமாக கிடைக்காத செலவு 2748 பில்லியன் ரூபாய்களாகும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.