ஜனாதிபதிக்கு பிரதமரிடம் சென்ற முக்கிய செய்தி

0
276

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று காலை ஜனாதிபதியிடம் தனது நிலைப்பாட்டை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த பிக்குகள் குழுவொன்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.