சொத்துக்களை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கிய தம்பதி

0
741

அவுஸ்திரேலியாவில் 2-வது பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ட்விக்கி-நிகோலா தம்பதியினர், தங்கள் பிள்ளைகள் சொத்துக்கு வாரிசாக மாட்டார்கள் என்று அறிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பணக்காரர் ஆண்ட்ரூ ட்விக்கி பாரஸ்ட் மற்றும் அவரது மனைவி நிக்கோலா. நாட்டின் 2வது பணக்கார குடும்பம். இந்நிலையில், ஆண்ட்ரூ ட்விக்கி-நிகோலா தம்பதியினர், தங்கள் பிள்ளைகள் சொத்துக்கு வாரிசுகளாக இருக்க மாட்டார்கள் என அறிவித்தனர்.

தங்களின் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்தனர். இவர்களது சொத்து வீட்டு உதவி, கல்வி, புற்றுநோய் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிக்கோலா கூறியது போல்,

‘எங்கள் குழந்தைகள் கிரேஸ், சோபியா மற்றும் சிட்னி ஆகியோர் பெரும் செல்வச் சுமையுடன் வாழ விரும்பவில்லை. நாங்கள் ஒரு வீட்டில் வசிக்கிறோம். என் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. பணத்தால் அதை வாங்க முடியாது. குழந்தைகள் பெரிய அளவில் பணத்தைப் பெறுவார்கள் என்று நினைப்பது பயனற்றது.

ஆண்ட்ரூ ட்விக்கி கூறியது போல்,

‘தனிப்பட்ட உடமைகள் மற்றும் பொருட்களைத் தவிர எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்கான முடிவு எளிதானது. நாம் செல்வந்தராக சாகக்கூடாது அதனால் என்ன பயன்?’ என்றார்.