பிரான்ஸ தலைநகர் பாரிஸில் அடுத்தடுத்து இரு மின்சார பேருந்துகள் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்திய நிலையில், மக்கள் பாதுக்கப்பு கருதி பொது புழக்கத்தில் உள்ள அனைத்து மின்சார பேருந்துகளையும் திரும்பப்பெற்றதாக அரசு அறிவித்தது.
மத்திய பாரிஸில் உள்ள தேசிய நூலகம் மற்றும் கலாச்சார அமைச்சகம் அருகே சென்ற மின்சார பேருந்து ஒன்று திடீரென தீ பிடித்து சாம்பலானது.
இரண்டாவது முறையும் மின்சார பேருந்து தீ பற்றியதால் மக்களின் பாதுகாப்பு கருதி புழக்கத்தில் உள்ள 149 மின்சார பேருந்துகளை திரும்பப் பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.