உயிருக்கு அச்சுறுத்தல்; நடிகை சித்ராவின் கணவர் புகார்!

0
653

அரசியல் பின்னணி கொண்ட கும்பலால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதனையடுத்து உயிரிழந்த சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு, பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத் புகார் மனு அளித்துள்ளார் .

மனுவில் அரசியல் பின்னணி கொண்ட கும்பலால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதுடன், போன் வழியாகவும் மிரட்டல்கள் வருவதாக தெரிவித்த ஹேம்நாத், தனக்குக் காவல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.