ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி!

0
427

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று (28) மாலை இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு அரசியலில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.