இரு தினங்களுக்கு மின்வெட்டு இல்லை

0
758

மே மாதம் 1ம் மற்றும் 3ம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மே 1 முதல் மே 4 வரையான நான்கு நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளை மே 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.