மருந்துவ உபகரணங்களை நன்கொடையாக அளித்த இந்தோனேஷியா!

0
557

இலங்கைக்கு இந்தோனேஷியா அரசாங்கத்தினால் 550 மில்லியன் ரூபா (1.6 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் முதற்கட்ட நன்கொடையாக வழங்கப்பட்டன.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இந்தோனேஷியா தூதுவரால் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் (Channa Jayasumana) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த நன்கொடை நேற்றைய தினம் (28-04-2022) 1,284 கிலோ (1.2 தொன்) வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதிர்வரும் மே 8 ஆம் திகதி இலங்கைக்கு உலக சுகாதார நிறுவனம் ஊடாக கொண்டுவரப்படவுள்ளது.