மீண்டும் தீவிரமடையும் தொற்று பரவல்: ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?

0
603

ஜெர்மனியில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 98,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் இதுவரை 51.15 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 62.50 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணடைந்துள்ளனர்.  

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமிக்ரோன் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜெர்மனியில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 98,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெர்மனியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,44,61,941 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 205 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.

ஜெர்மனியில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2,16,65,200 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 26,61,412 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.