போராட்டத்தில் தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது!

0
465

நாளைய போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது என்றும் ஆட்சியாளர்களிடமிருந்து எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

“இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அரசாங்கத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக மாபெரும் போராட்டங்கள் தெற்கிலே வெடித்திருக்கின்றது.

பல்லாயிரக்கணக்கானவர்கள் கொழும்பு பிரதான வீதிகளிலே அதேபோல கண்டியிலிருந்து பேரணிகள், பல்வேறு மாவட்டங்களிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் அடிக்கடி முழு நாட்டுக்கும் ஆனா ஒரு பொது வேலை நிறுத்தத்தை அழைப்பிலே நாங்கள் இணைந்து கொள்வதா இல்லையா என்ற ஒரு கேள்வி எழுகிறது?

இதிலே எங்களுடைய பிரதானமான எந்த கோரிக்கைகளும் இல்லாமல் இதில் ஆகக்குறைந்தது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை. இது போன்ற கோரிக்கைகள் எதுவும் இல்லாமல் நாங்கள் இவர்களுடன் சேர்ந்து இழுபட்டு கொண்டு போவதில் எந்த பிரயோசனமும் இல்லை.

இதைவிட இன்னொரு விடயத்தையும் வர்த்தகர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புகிறோம். நீங்கள் இந்த விலையேற்றத்தை பயன்படுத்தி வர்த்தக சமூகத்திலேயே ஒரு கணிசமான பகுதியினர் விலை அதிகரிப்பு, பதுக்கலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆகவே அதை நீங்கள் சீராக செய்து எங்களுடைய மக்களுக்கு கிடைக்கின்றதை பகிர்ந்து கொடுக்க கூடிய விதத்தில், விலை ஏற்றம் இல்லாமல், மோசடியில் இல்லாமல் பதுக்கல் இல்லாமல் செய்தாலே அதுவே இந்த போராட்டத்திற்க்கான ஆதரவாக அமையுமே ஒளிய நீங்கள் ஏதோ கடையை பூட்டிவிட்டு இன்னும் பூட்டிய கதவுக்கு பின்னால் இன்னும் மோசடிகளை ஒரு சிலர் செய்கின்ற எல்லோரையும் நாங்கள் சொல்லவில்லை,  இதை நீங்கள் செய்யாமல் வெறுமனே கடையடைப்பு செய்து நாங்கள் இந்த பிரச்சினைகளில் இழுபட்டுக்கொண்டு போவதில் அர்த்தமில்லை. 

ஆகவே போர்காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட எங்களுடைய பொருளாதாரம் இப்பொழுதும் அண்மைக் காலங்களிலும் பல தடவைகள் நாங்கள் கூட பொது முழு கடையடைப்பை கோருவதிலே தவிர்த்துக் கொண்டோம்.ஏனென்றால் மக்கள் நொந்து போயிருக்கிறார்.

ஆகவே இந்த சூழ்நிலையிலே எங்களுடைய இறுக்கமான சில கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வாறான விடயங்களை செய்வதை விடுத்து முழு நாட்டிற்க்குமான முழு ராஜபக்ச குடும்பம் சென்றவுடன் விலைவாசிகள் எல்லாம் கீழே வந்துவிடுமா இல்லை இவர் போய் அவர் வந்தவுடன் அவர்கள் ஏதோ வெட்டி விழுத்த போகிறார்களா?