லிட்ரோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

0
523


பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளும் வரை நகரங்களுக்கும், அத்தியாவசிய சேவைகளுக்கும் மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த முடிவால் தினசரி எரிவாயு விநியோகம் 60,000 முதல் 80,000 சிலிண்டர்களில் இருந்து 30,000 சிலிண்டர்கள் வரை குறைக்கப்படும் என்றும், 27 சதவீத எரிவாயு நுகர்வோர் மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்துவர் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் மாதாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 30 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதால், அவ்வாறான செலவுகளை மேற்கொள்ள முடியாது எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.