ஒன்பது காதலிகளை மணந்துகொண்ட நபர்: அவரது மனைவிகளில் ஒருவர் எடுத்துள்ள முடிவு

0
678

சென்ற ஆண்டு, பிரேசில் நாட்டில் ஒரே நேரத்தில் ஒன்பது காதலிகளை மணந்துகொண்டதால் கவனம் ஈர்த்தார் செல்வந்தரான இளைஞர் ஒருவர்.

Arthur O Urso என்ற அந்த இளைஞருக்கு பத்துப் பெண்களை மணந்துகொண்டு ஆளுக்கொரு குழந்தையாக மொத்தம் பத்துக் குழந்தைகள் வேண்டும் என்று ஆசையாம்.

அவ்வகையில், அவர் தனது ஒன்பது காதலிகளை சென்ற ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தான் யாருடன் நேரம் செலவிடுவது என்பதில் தன் மனைவிகளுக்கு பிரச்சினை இல்லை என்றாலும், தான் யாருக்காவது சற்று விலையுயர்ந்த பரிசு வாங்கிக் கொடுத்தால் அதனால் அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார் Arthur.

ஒரு மனைவியுடன் ஷாப்பிங் செல்வதற்கே ஆண்கள் பலர் சலித்துக்கொள்ளும் நிலையில், ஒரே நேரத்தில் தன் ஒன்பது மனைவிகளையும் ஷாப்பிங் அழைத்துச் சென்று அசத்துகிறார் Arthur.

ஆனாலும், அவரது மனைவிகளில் ஒருவருக்கு தன் கணவர் மற்ற மனைவிகளுடன் நேரம் செலவிடுவது பிடிக்காமல், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என போர்க்கொடி தூக்க, மற்ற மனைவிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அந்தப் பெண் தற்போது Arthurஐப் பிரிய இருக்கிறார்ர்.

நான் ஒரு மனைவியை இழந்துவிட்டேன் என்று கூறும் Arthur, அவளுக்கு பதில் வேறொரு பெண்ணை மணக்கும் திட்டம் இப்போதைக்கு தனக்கு இல்லை என்கிறார்!