எதிர்வரும் 3 நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு!

0
498

நாளை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரையிலான மூன்று மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.