காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளை சந்தித்த அமெரிக்கா தூதுவர்!

0
291

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஜூலி சுங் (julie chung)காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை ஜூலி சுங்(julie chung) வலியுறுத்தியுள்ளார்.

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.

போரின் போது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் இதயத்தை உடைக்கும் கதைகளை இன்று நேரடியாக கேட்டு அறிந்துகொண்டதாக அமெரிக்கத் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.