அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு!

0
299

“இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி தொடர்சியாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்குமுகமாகவும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டி நிற்கின்றது”

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“நாளையதினம் (28) 1000க்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

இதற்கு ஆதரவினை தெரிவித்தும் அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தத்தினை வழங்குமுகமாகவும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டி நிற்கின்றது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.