“எழுத்துப்பூர்வமான உத்திரவாதம் வேண்டும்”…. உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக்….!

0
452

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம்காட்டி வருகிறது.

இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் போர் அச்சம் காரணமாக பதுங்கி இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கத்துடன் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக், ரஷ்யா எந்தவொரு ஒப்பந்தமும் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுக்கு தெரிவிக்கவில்லை. எனவே உக்ரைன் எழுத்துப்பூர்வமான உத்திரவாதத்தை எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார்.