இலங்கையின் தலைவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கூட இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தை பதவி விலகுமாறு மாகாநாயக்கர்கள் உட்பட அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். என்ற போதும் ஜனாதிபதியும், பிரதமரும் காது கேளாதது போலவும், கண் தெரியாதது போலவும் நடந்து கொள்கின்றனர்.
தற்போது நாட்டில் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக ஒன்று திரண்ட அனைவருக்கும் வெறுத்து போயுள்ளது. வீதிகளில் நிலையான வீதித்தடைகளை பொருத்தியுள்ளனர். சில வீதித்தடைகளில் முட்கம்பிகள் இருந்தன.