“அனைத்து ராஜபக்சக்களும் வீட்டிற்கு செல்ல வேண்டும்” – எஸ்.எம்.மரிக்கார் தெரிவிப்பு

0
296


தனது குடும்பத்திற்காக அதிகாரத்தை பற்றிப்பிடித்து கொண்டிருக்காமல், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டே கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டுக்கு கேடு விளைவிக்கும் தீர்மானங்கள் அனைத்தையும் எடுத்தது.

நாட்டை படுகுழியில் தள்ளியதுடன் மக்களை சட்டியில் இருந்து அடுப்பிற்குள் தள்ளினர். இதன் காரணமாகவே மக்களின் பாதிப்புகள் வெளியில் வந்து, அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவரும் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்சவினரையும் வீட்டுக்கு செல்லுமாறு கூறுகின்றனர்.

இதனால், தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மட்டுமல்ல 113 என்ற பெரும்பான்மை பலத்தையும் இழந்து விட்டது. ஜனநாயகத்தை மதிக்கும் மகிந்த ராஜபக்ச தற்போது கட்டாயம் பதவி விலக வேண்டும்.

பதவி விலகாமல், அதிகாரத்தை பிடித்துக்கொண்டிருக்க அவர் நினைத்தால், அவரை மக்கள் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறிவதை நிறுத்த முடியாது. நாங்கள் தெளிவாக மகிந்த ராஜபக்சவுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.