நிதி அமைச்சர் அலி சப்ரியை பாராட்டிய மனோ கணேசன்!

0
246

நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி மேற்கொண்டு வரும் பிரயத்தனத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பாராட்டியுள்ளார்.

அவருக்கு எதிர்க்கட்சி, ஆளும் கட்சி பேதங்கள் இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தனது பேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“நிதி அமைச்சர் அலி சப்ரி இடையில் வந்தவர். மக்கள் ஆணையில் அவர் நேரடியாக வரவில்லை. இன்று அவரால் இயன்றதை செய்கிறார்.

இன்று ஓடி ஒளிந்திருக்கும் பாவிகள், வாங்கிய கடன்களை சமாளிக்க இவர் பாவம், படாத பாடுபடுகிறார். “கையில் காசில்லை. ஆகவே உடனடி நிதி நிவாரணம் வேண்டும்.

ஒட்டுமொத்த கடன்கள், மீள்செலுத்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு புதிய திகதி அட்டவணை படுத்தப்பட வேண்டும். உள்நாட்டில் புதிய வரிக்கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

”இவை மூன்றும் சப்ரி முன் உள்ள பிரதான சவால்கள். அவர் சொல்லொணா துயறும் மக்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக, இவை தொடர்பில் எதிர்-ஆளும் கட்சி பேதங்கள் இல்லாமல் நாம் அவருடன் ஒத்துழைப்போம்.

“இடைக்கால ஆட்சி எல்லாம், இந்த அதிகார ஜனாதிபதியுடன் சரிவராது. ஆனால் நிதி அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு நாம் இப்போது பிடுங்கி எடுக்க முயற்சிக்கிறோம்.” என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.