வெளிநாட்டு பணியாளர்களின் பணப்பரிமாற்றம் தொடர்பில் வெளியாகிய தகவல்

0
450

சிறிலங்காவுக்கான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் 2022 மார்ச் மாதத்தில் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது.

பெப்ரவரியில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தொழிலாளர்களின் பணம் மார்ச் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

எனினும் மார்ச் 2021 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 612 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட இந்த தொகை இன்னும் குறைவாகவே உள்ளது.

Gallery