நைஜீரியாவில் சட்டவிரோத எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிவிபத்து! நூறுக்கும் மேற்பட்டோர் பலி!

0
500

நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில் உள்ள ரிவா்ஸ் என்ற இடத்தில் சட்டவிரோதமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 100 க்கும் மேற்பட்டவா்கள் இறந்திருக்கலாம் என்று அந்நாட்டு ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. விபத்தில் காயமடைந்தவா்கள், சேதங்கள் ஆகியவை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தலைமறைவாகியுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரையும் அவா்கள் தேடி வருகின்றனா் என்று அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Explosion at oil refinery in Nigeria: more than a hundred dead - Global  Happenings