வடக்கு கிழக்கில் மே தின நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

0
555

தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட கிளையினருடனான சந்திப்பு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினம் அவரது சமாதியில் இடம்பெற்று நூல் வெளியீடும் நினைவுகளும் இடம்பெறும்.

வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் உயர்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பி.ப 2 மணிக்கு கரடிப்போக்குச் சந்தியில் ஆரம்பிக்கும் மே தினப் பேரணியானது, டிப்போச் சந்திக்கு சென்றடைந்து அங்கு இருக்கும் பூங்காவில் மேதின எழுச்சிக் கூட்டம் நடைபெறும்.

இந்தப் பேரணியினை தொகுதிக்கிளைகள் மற்றும் மாவட்டக் கிளைகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடாத்துவதற்கு முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.