யுவதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது

0
487

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 780 மில்லிகிராம் ஹெரோயின், 2784 மில்லிகிராம் கேரள கஞ்சா மற்றும் 5 மாத்திரைகளுடன் 20 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இன்று பிற்பகல் பிறந்துரைச்சேனை கோவில் வீதியிலுள்ள வீட்டைச் சுற்றிவளைத்த மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் அப்பகுதிக்கு உத்தரவிட்டனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 20 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு 780 மில்லிகிராம் ஹெரோயின், 2,784 மில்லிகிராம் கேரள கஞ்சா மற்றும் 5 போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

முன்னதாக கைது செய்யப்பட்ட யுவதி முன்பே இருமுறை போதைப் பொருள் கடத்தலில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.