நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த 17வயது சிறுவன் பலி!

0
392

 மியன்எல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குண்டசாலை – பன்சலவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், நேற்று மதியம் 8 பேருடன் மியான்எல்லவுக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த நிலையில், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.