யாழில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி; தீவிர விசாரணையில் பொலிஸார்!

0
547

யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.