அரண்மனைக்குள் சதி செய்வதில் அர்த்தமில்லை: சாலைப் புரட்சியில் அரசியல் செய்ய வேண்டும்! – ரணில்

0
447

“இந்த நேரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை மக்கள் கோருகின்றனர். அரண்மனைகளுக்குள் சதி செய்வதில் அர்த்தமில்லை. சாலையில் ஒரு புரட்சி உள்ளது. அதற்கு நடுவில் அரசியல் செய்ய வேண்டும். அந்த நிலைக்கு வந்துவிட்டோம்” என்று ரணில் விக்கிரமசிங்க சுட்டிகாட்டியுள்ளார்.

நேற்று (22) மாலை இடம்பெற்ற வங்கியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

“வங்கிகள் இல்லாமல் பொருளாதாரம் வாழ முடியாது. டொலர் நெருக்கடி மற்றும் வங்கிகளின் சரிவு ஆகியவற்றின் கலவையானது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. எங்களின் சில வங்கிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன, சில வங்கிகள் மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும். என்றும் குறிப்பிட்டார்.

சிறிலங்கா தற்போது உள்நாட்டுப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும், பூகோள நெருக்கடியின் முழு அளவை இன்னும் எதிர்கொள்ளவில்லை என்றும், எதிர்காலத்தில் அதையும் எதிர்கொள்ள உள்ளதாகவும் முன்னாள் பிரதமர் கூறினார்.

“எதிர்காலத்தில், எரிபொருள், உணவு, உரம் மற்றும் பலவற்றின் பற்றாக்குறை ஏற்படலாம். பெரும்பாலான கோதுமை மாவு உக்ரைன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து வந்தது. அதன் உற்பத்தி தற்போது குறைந்து வருகிறது எனவும் சுட்டிகாட்டினார்.

மேலும், நாட்டின் பொருளாதாரம் இப்படியே நீடித்தால் நடுத்தர வர்க்கம் அழிந்துவிடும் என்றும், அதன் விளைவாக உழைக்கும் வர்க்கம் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இப்பிரச்சினையை கையாள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். “தற்போதைய நெருக்கடிக்கு தனியார் துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூற நான் தயங்கமாட்டேன். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சகல வருமான வரிகளையும் குறைத்தால் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும் என அரச தலைவரிடம் கூறினார்கள். அது இப்போது உருவாகிவிட்டதா?” என்றும் கேள்வி எழுப்பினார்