போரில் துவண்டு வந்த ரஷ்யாவை தூக்கி நிறுத்திய கசாப்புக் கடைக்காரர்!

0
366

துவண்டு வந்த ரஷ்யாவை தூக்கி நிறுத்திய கசாப்புக்கடைக்காரரான ரஷ்ய தளபதி ஒருவரின் தகவல் வெளியாகியுள்ளது.

வலிமையான நாடு என கருதப்படும் ரஷ்யா எளிதாக உக்ரைனை வென்றுவிடலாம் என்று எண்ணி உக்ரைனுக்குள் ஊடுருவ, எதிர்பார்க்க முடியாத எதிர்ப்பைக் காட்டியது உக்ரைன்.

ஏராளம் படைவீரர்கள், போர் வாகனங்கள், முக்கிய தளபதிகள் என கடும் இழப்பைச் சந்தித்தது ரஷ்யா. அது வெறும் இழப்பு மட்டுமல்ல, தான் ஒரு வலிமையான நாடு, பெரிய நாடு என்ற திமிரில் ஆணவமாக போரைத் துவக்கிய ரஷ்யாவுக்கு உலக அரங்கில் பெரும் அவமானமே பரிசாகக் கிடைத்தது.

ஆக, தன்மானப் பிரச்சினையாகிவிட்ட உக்ரைன் போரை எப்படியாவது ஜெயித்தே ஆகவேண்டும் என தீவிரமாக முயன்று வரும் நிலையில் ரஷ்யா திடீரென ஒரு முடிவை தீர்மானிக்கிறது.

அந்த தீர்வே தற்போது நிலைமையை ரஷ்யாவுக்கு சாதகமாக மாற்றியுள்ளார், ‘கசாப்புக்கடைக்காரர்’ என வர்ணிக்கப்படும் ரஷ்ய தளபதி ஒருவர்.

15 நாட்களுக்கு முன் உக்ரைன் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவ் (Alexander Dvornikov)என்ற தளபதிதான் போர் திட்டத்தை மாற்றி புடினுடைய(Vladimir Putin)வெற்றிக்கு வழிவகுத்துள்ளார் என மேற்கத்திய நாடுகளின் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

உக்ரைன் ரஷ்யப் போரில் புதிய அத்தியாயம் ஒன்று துவங்கியுள்ளதாக தெரிவிக்கும் அவர்கள், முன்பு தோல்விகளை சந்தித்தாலும், புடின்(Vladimir Putin) தற்போது வெல்லும் நிலையில்தான் உள்ளார் என்கிறார்கள்.

கீவ் நகரை கைப்பற்ற முயன்று தோல்வியடைந்த ரஷ்யப் படைகள் தற்போது டான்பாஸ் பகுதியைக் குறிவைத்து தாக்கி வருகின்றன. பெரிய பகுதிகளைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், சிறு சிறு பகுதிகளாக கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மே மாதம் 9ஆம் திகதி, இரண்டாம் உலகப்போரில் நாசிக்களை வென்றதைக் கொண்டாட இருக்கும் ரஷ்யப் படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட இருக்கும் புடின்(Vladimir Putin), ரஷ்யப் படைகள் உக்ரைனில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மாஸ்கோவில் தனது வெற்றி விழா பேரணியின் முன் நிற்க விரும்பமாட்டார்.

ஆகவேதான், அதற்கு முன்பு டான்பாஸ் பகுதியையாவது கைப்பற்றிவிடவேண்டும் என்ற முடிவுடன் ரஷ்யப் படைகள் அப்பகுதியைக் குறிவைத்து வருகின்றன என்கிறார் மேற்கத்திய நாடுகளின் நிபுணர் ஒருவர்.