லுணுகலையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
468

லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 56 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை லுணுகலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.