பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மீண்டும் அபராதம் விதிப்பு!

0
705

ஊரடங்கு விதிகளை மீறியதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு (Boris Johnson)  இரணடாவது  முறையாக மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 மே 20ம் திகதி பிரதமர் அலுவலகம் உள்ள டவுண் ஸ்டிரிங் பகுதியில்இடம்பெற்ற விருந்தில் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

முதல் முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட போது விதிகளை மீறி நடத்தப்பட்ட வசந்த கால வரவேற்பு நிகழ்ச்சியில் போரிஸ் 25 நிமிடங்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக அவருக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் ரூபா வரை போலிஸார் அபராதம் விதிக்கலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.

அதேவேளை ஏற்கனவே பிறந்தநாள் விருந்து சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கோரிய போரிஸ் ஜான்சன் (Boris Johnson)தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.