25 – 30 சதவீதமான சிற்றுணவகங்களிற்கு பூட்டு!

0
360

எரிவாயு இன்மை காரணமாக நாடளாவிய சிற்றுணவகங்களில், 25 முதல் 30 சதவீதமானவை, , மூடப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சிற்றுணவகங்களின் வர்த்தக நடவடிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

அத்துடன் தொடரும் நெருக்கடியால் , எதிர்காலத்தில் மேலும் பல சிற்றுணவகங்கள் மூடப்படும் நிலை உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.