சுவிட்சர்லாந்தில் பணியாளர்கள் தேவை அதிகரிப்பு

0
669

சுவிட்சர்லாந்தில் பணியாளர்கள் தேவை அதிகரித்துள்ளதை சுவிஸ் பொருளாதார நிறுவனம் ஒன்று உறுதிசெய்துள்ளது.

சூரிச்சிலுள்ள ETH Zurich ஆய்வு நிறுவனம் (KOF), சுவிட்சர்லாந்தில் பணியாளர்கள் தேவை அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளதுடன், அனைத்துத் துறைகளிலுமுள்ள நிறுவனங்கள் பணியாளர்களை பணிக்கமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுவிட்சர்லாந்தில் பணி செய்ய ஆட்கள் தேவை என்பது தொடர்பான விளம்பரங்கள் 47 சதவிகிதமாக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது வரலாறு காணாத அளவிலான அதிகரிப்பாகும்.

குறிப்பாக டிஜிட்டல் திறன் கொண்ட பணியாளர்களுக்கு அதிக தேவை இருப்பதாக சூரிச் பல்கலை மேற்கொண்ட தெரிவித்துள்ளது.

பெருந்தொற்று காலகட்டம் பல தொழில்களை டிஜிட்டல் மயமாக்கச் செய்ததையடுத்து அத்துறையில் பல வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.