ரம்புக்கண சம்பவத்தில் கைதானவருக்கு நீதிமன்றம் பிணை

0
657

இந்த வார தொடக்கத்தில் றம்புக்கண பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது எரிபொருள் தாங்கிக்கு தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இரண்டு சரீரப் பிணைகளில் தலா ரூ. 100,000 பெறுமதியன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

27 வயதான குறித்த நபர் நேற்று இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.