போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் தேர்தல் ஆணையாளர் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

0
380

 தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படம் சமூககவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டியில் இருந்து காலி முகத்திடல் போராட்ட தளத்திற்கு பேரணியாக சென்ற நடிகர் ஜோஹான் அப்புஹாமி நேற்று காலி முகத்திடல் மைதானத்தை வந்தடைந்தார்.

நடிகர் ஜோஹான் அப்புஹாமி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு சென்று ஆசிர்வாதம் பெற்று தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

சுமார் 40 கிலோமீற்றர் தூரம் பெரிய சிலுவையை சுமந்த வண்ணம் ஆரம்பித்திருந்த இந்த பயணத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் கலந்துகொண்டார்.