அதிகரிக்கும் திருமண மண்டப கட்டணம்!

0
357

திருமண மண்டப கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது.

திருமண மண்டபக் கட்டணம் 40 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

இத்துறையில் நிலைத்திருக்க, இன்றைக்குப் பிறகு பெறப்படும் அனுமதி கோருபவர்களுக்கு  குறைந்தபட்சம் 40% விலை உயர்வு தேவை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதேவேளை, எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 30 வீதமான உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் மேலும் பல உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத்  தெரிவித்துள்ளார்.