நான்காவது நாளாக தொடரும் சிலுவை தாங்கிய போராட்டம்!

0
427

மூன்று வருடங்களுக்கு முன் நடந்த மிலேச்சதனமான குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உயிர்களுக்கு நீதி கோரியும், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரியும் தொடர்ந்தும் சிலுவையை தாங்கிய போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய பகுதியில் இருந்து இந்த போராட்டத்தை ஜெஹான் ஹப்புஹாமி என்பவர் மேற்கொண்டுள்ளார்.

இப் போராட்டமானது இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதுடன் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று வத்தளை தேவாலயத்தில் ஆரம்பித்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று அங்கு ஆராதனையில் ஈடுப்பட்டு பின்னர் அங்கிருந்து காலிமுகத்திடல் நோக்கி சிலுவை தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இவரின் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலர் ஆராதனைகளில் ஈடுப்பட்ட வண்ணம் அவரை பின் தொடர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.