விசேட நினைவு கூரலுடன் 14 ஆவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

0
387

காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் 14 ஆவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் விசேட நினைவு கூரல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.