“புதிய அமைச்சரவையை நாம் ஏற்கமாட்டோம்” கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்

0
472

நாட்டில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது என்றும், எனவே, ஆசிர்வாதம் பெறுவதற்கு எவரும் விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம் எனவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் கடும் தொனியில் கூறியுள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் யோசனை முன்வைத்தார்கள்.

எனினும் அரசாங்கத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, புதிய அமைச்சரவையை நாம் ஏற்கமாட்டோம் என்றும், ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம் எனவும் தேரர் கூறினார்.

மேலும் 20 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் இதன்போது தெரிவித்தார்.