ரஷ்யா போராட்டத்திற்க்கு உலக நாடுகளின் உதவியை பெற எத்தனிக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

0
485

ரஷ்ய படையெடுப்பு தொடர்பில் உலக நாடுகளின் ஆதரவை பெற நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.

உக்ரைனின் டான்பாஸ் நகர் மீது ரஷ்ய துருப்புகள் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையிலேயே, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜெலென்ஸ்கி, உலக நாடுகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் நாட்டின் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்க வேண்டும் எனவும், அதில், உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப கேளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.