இந்தியாவிற்குள் நுழைந்தார் பிரிட்டன் பிரதமர்

0
471

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்  (Boris Johnson) இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனை (Boris Johnson) , மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்யா தேவ்வர்தா ஆகியோர் வரவேற்றனர்.

தமது பயணத்தின் முதல் கட்டமாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு செல்லும் அவர், அங்குள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதிக்க உள்ளார்.

தொடர்ந்து புதுடெல்லி திரும்பும் போரிஸ் ஜான்சன் நாளை பிரதமர் மோடியுடன் (Narendra modi) பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பகுதி பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.