முன்னாள் அமைச்சர்கள் குழுவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது தவறு: பொதுஜன பெரமுன கண்டனம்

0
389

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தற்போது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது எழுந்த சர்ச்சையே இதற்குக் காரணம் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இளைஞர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்பட்ட போதிலும், முன்னாள் அமைச்சர்கள் குழுவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக சமூகத்தின் பார்வையில் திறமையற்றவர்களாகவும், ஊழல்வாதிகளாகவும் அறியப்பட்டதாக பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.