எனது மாளிகையை அழித்துவிடுங்கள்; உக்ரைன் ராணுவத்திடம் கோரிக்கை வைத்த கோடீஸ்வரர்?

0
587

தனது மாளிகையை ரஷ்ய வீரர்கள் ராணுவத் தளவாடமாகப் பயன்படுத்துவதை கண்ட உக்ரைன் நாட்டு கோடீஸ்வரர் ஒருவர், அம் மாளிகையை குண்டு வீசி தகர்த்து விடுமாறு உக்ரைன் ராணுவத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

துறைமுகத்தை நிர்வாகிக்கும் நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ-வான ஆண்டிரே ஸ்டாவ்னிட்சர் அண்மையில் சொகுசு பங்களா ஒன்றை கட்டினார். அதன்பின்னர் , ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து அவர் போலந்தில் தஞ்சமடைந்தார்.

எனது மாளிகையை அழித்துவிடுங்கள்; உக்ரைன் ராணுவத்திடம் கோரிக்கை வைத்த  கோடீஸ்வரர்? - கனடாமிரர்

கீவ் மாகணத்துக்குள் புகுந்த ரஷ்ய படைகள், அவரது மாளிகையில் தளவாடம் அமைத்து கீவ் நகர் மீது ராக்கெட் ஏவுகணைகளை வீசி வந்ததுடன் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களையும் அவரது மாளிகையில் பதுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா மூலம் இவற்றை பார்த்த ஸ்டாவ்னிட்சர், தனது மாளிகையின் இருப்பிடம் குறித்து உக்ரைன் ராணுவத்தினருக்கு தெரிவித்ததுடன், அதனை குண்டு வீசி தகர்த்து விடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.