கொரோனாவையும் மீறி டெல்லி பஞ்சாப் போட்டி நிறைவு.. இனி காத்திருக்கும் ஆபத்து!

0
541

ஐபிஎல் போட்டியில் நேற்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்த போட்டிக்கு முன்னரே டெல்லி வீரர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், பரிசோதனைக்கு பின்னரும் போட்டி நடத்தபட்டுள்ளது.

மேலும், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போட்டி நடைபெறாது என எதிர்ப்பார்த்த நிலையில், போட்டி நடத்தப்பட்டது.

கொரோனா பாதிக்கப்பட்ட மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக சர்பிராஸ் கான் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பேசிய, டெல்லி அணியின்

கேப்டன் ரிஷப் பண்ட், துரதிஷ்டவசமாக அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், இருப்பினும் அதனையும் மீறி நாங்கள் இன்று களத்துக்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

எதிர்மறையான விசயங்களை தள்ளிவைத்துவிட்டு எங்கள் கவனம் கிரிக்கெட் மீது மட்டுமே இருப்பதாகவும் ரிஷப் பண்ட் கூறினார்.

இருந்தாலும், ஒரு பக்கம் நெட்டிசன்கள் டெல்லி அணியின் வீரர்களுக்கு கொரோனாவால், பல வீரர்களுக்கும், மக்களுக்கு பாதிப்பபை ஏற்படுத்தியிருக்கும்.

இந்த போட்டியை வேறு திகதிக்கு மாத்தி இருக்கலாம். என கொந்தளித்து வருகின்றனர்.