அமைதியாக நடக்கும் ஆர்ப்பாட்டங்களை குழப்பி பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் இருந்து குழுக்கள் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 69 இலட்சம் பேரும் ஜனாதிபதியை தெரிவு செய்தனர். இப்போது அவர்கள் அனைவரும் ஜனாதிபதியை போகுமாறு கூறுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.