பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்!

0
432

இலங்கை அரசாங்கத்திக்கு எதிராக மக்கள் போராட்டம் நாடாளவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் போராட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.

ரம்புக்கனையில் நேற்றையதினம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்காலையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இலத்திற்கு அருகில் பெருமளவு மக்கள் குவித்துள்னர்.

இதேவேளை, இன்றைய தினம் நாடாளவிய ரீதியில் பல தொழிற்சங்கள் கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.