அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகிய அமைச்சர்கள்

0
485

நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து இன்று முதல் விலகியுள்ளனர்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஆளுங்கட்சியில் இருக்கும்போது தனக்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

இன்று நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்த காரணத்தினாலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாலும் தாங்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவை ரவிலக்கிக்கொள்கிறோம்.