20 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றிய கடற்படையினர்

0
508

சிறிலங்கா கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 81 கிலோ 220 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

 இன்று (ஏப்ரல் 20, 2022) காலை மன்னார் மணல் கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் வைத்தே கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் வழி சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை கண்காணிப்பு மற்றும் வழக்கமான ரோந்துகளை நடத்துகிறது.

அதன்படி,  இன்று மன்னார் மணல் கரையோர கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையின் போது மணல் மேட்டில் சந்தேகத்திற்கிடமான சாக்கு ஒன்று கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த சாக்கு பையில் சுமார் 81 கிலோ 220 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா அடைக்கப்பட்ட 25 பொட்டலங்கள் இருந்தன. கடற்படையின்  வருகை காரணமாக கடத்தல்காரர்கள் கேரள கஞ்சாவை எடுத்துச் செல்ல முடியாமல் விட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் மொத்த  மதிப்பு ரூ. 20 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.