றம்புக்கனை சம்பவம் குறித்து கோட்டாபய வெளியிட்ட பதிவு

0
442

றம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இதனைதொடர்ந்து, றம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பொதுமக்களும் வன்முறையை தவிர்க்குமாறு ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் மேலும் கோரியுள்ளார்.